search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிணற்றில் குதித்து தற்கொலை"

    • வீட்டில் உள்ளவர்களை அறையில் பூட்டி வைத்து விட்டு விபரீதம்
    • உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தி

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த திரியாலம் பகுதியைச் சேர்ந்தவர் முனிரத்தினம் (வயது 63). விவசாயி. இவரது மனைவி பார்வதி, இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். முனிரத்தினத்திற்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று நள்ளிரவு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

    இந்த நிலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அனைவரையும் அறையில் வைத்து பூட்டிவிட்டு முனிரத்தினம் அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவின் பூட்டை உடைத்து உள்ளே இருந்தவர்களை வெளியே அழைத்து வந்தனர்.

    இது குறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து கிணற்றில் இருந்து முனிரத்தினம் உடலை மீட்டனர்.

    இச்சம்பவம் அறிந்தது ஜோலார்பேட்டை போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவருக்கு திருமணம் ஆகவில்லை. தங்கராசுவின் அம்மா, அப்பா இருவரும் இறந்துவிட்டனர்.
    • அப்போது திருமணமாகாத விரக்தியில் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா படமுடி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மகன் தங்கராசு (வயது38). விவசாயி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. தங்கராசுவின் அம்மா, அப்பா இருவரும் இறந்துவிட்டனர் .அவரது தங்கை பிரியாவுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டனர்.

    இந்நிலையில் தங்கராசு திருமணமாகாத நிலையில் தனியாக வசித்து வந்தார். அப்போது திருமணமாகாத விரக்தியில் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தங்கராசு மது அருந்திவிட்டு அப்பகுதியில் உள்ள நாவிதன் தோட்டத்து கிணற்று பக்கம் சென்று கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2 நாட்களாக அவரை காணாததால் உறவினர்கள் பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர்.

    அப்போது கிணற்றில் வாலிபர் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்த போது தங்கராசு பிணமாக மிதந்து கொண்டிருந்தார். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர் .புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • கொத்தனாரான இவருக்கு, வனிதா என்ற மனைவியும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளது.
    • பார்த்திபனுக்கும், வனிதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தையை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சக்கரைசெட்டியபட்டி ஊராட்சியில் உள்ள வெள்ளப்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். கொத்தனாரான இவருக்கு, வனிதா என்ற மனைவியும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளது.

    கருத்து வேறுபாடு

    இந்த நிலையில், பார்த்திபனுக்கும், வனிதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பார்த்திபனிடம் கோபித்துக்கொண்ட வனிதா, கொல்லப்பட்டி கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தையை எடுத்துக்கொண்டு சென்று விட்டார். இதையடுத்து பார்த்திபன், மாமனார் வீட்டிற்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால், உன்னோடு வாழ பிடிக்கவில்லை, நாம் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளலாம் என மனைவி வனிதா கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில், தனது குழந்தைக்கு பெயர் வைப்பதற்காக, பெயர் பட்டியலை எடுத்துக்கொண்டு மாமனார் வீட்டிற்கு பார்த்திபன் மீண்டும் சென்றுள்ளார். அப்போது வனிதா, அவரை திட்டியதுடன், குழந்தையை பார்க்க அனுமதிக்காமலும், பெயர் வைக்க விடாமலும் தடுத்து உள்ளார். மேலும், கணவரை அடித்ததுடன், அவரது இரு சக்கர வாகனத்தை வாங்கி வைத்துக்கொண்டு விரட்டிய தாக கூறப்படுகிறது.

    கிணற்றில் குதித்தார்

    இதனால், மனவேதனை அடைந்த பார்த்திபன், தனது வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் குதித்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரம் போராடி, பார்த்திபனை பிணமாக மீட்டனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓமலூர் போலீசார், பார்த்திபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பார்த்திபன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×